மத்திய அரசின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பினை மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக், சட்டம், மருத்துவம் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 88
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-
- உதவி இயக்குநர் : 13
- சட்ட அலுவலர் : 06
- உதவி இணை இயக்குநர் : 13
- வல்லுநர் : 56
கல்வித் தகுதி :
- உதவி இயக்குநர் : பி.இ, பி.டெக், பி.எஸ்சி
- சட்ட அலுவலர் : LLM (Master of Legislative Law)
- மருத்துவ வல்லுநர் : எம்பிபிஎஸ் (Bachelor Of Medicine/Bachelor Of Surgery)
வயது வரம்பு:
- உதவி இயக்குநர் : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- சட்ட அலுவலர் : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- மருத்துவ வல்லுநர் : 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- (அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் மாற்றம் உண்டு)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக upsc.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.10.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.25
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.upsconline.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.