இந்திய பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 400-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்ற ஆண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய பாதுகாப்புப் படை
தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 418
பணி மற்றும் பணியிட விபரங்கள்:-
- தேசிய அகாடமி - 208
- கப்பற்படை - 42
- விமானப்படை -120
- நாவல் அகாடமி - 48
கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 02.07.2001 முதல் 01.07.2004 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 19.04.2020
எழுத்துத் தேர்வு மையங்கள் : தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் இத்தேர்விற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100.
- எஸ்சி, எஸ்டி., பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 28.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://upsconline.nic.in/mainmenu2.php என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.