மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள புவியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்
மேலாண்மை : மத்திய அரசுப் பணி
பணி : புவியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 106
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-
- ஜியாலஜிஸ்ட் - 50
- ஜியோபிசிக்ஸ்ட் - 14
- கெமிஸ்ட் - 15
- ஜூனியர் ஹைட்ராலஜிஸ்ட் - 27
வயது வரம்பு : 01.01.2019 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, ஹைட்ராலஜி மற்றும் துறை சார்ந்த முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.200.
- எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : www.upsc.gov.in என்னும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 16.04.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 08.06.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsc.gov.in அல்லது https://upsc.gov.in/sites/default/files/GEOL2019-E_1.pdf என்ற இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.