மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் (யுபிஎஸ்சி) மத்திய ஆயுதப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலிப் பணியிடங்கள்
தற்போது யுபிஎஸ்சி சார்பில் எல்லைப் பாதுகாப்புப் படை அசிஸ்டண்ட் கமாண்டன்ட் (குரூப் ஏ), மத்திய ஆயுதப்படை, மத்திய தொழிற்பாதுகாப்பு படை, இந்திய - திபெத்ய எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
யுபிஎஸ்சி-யின் ஆண்டு அட்டவணைப்படி மத்திய ஆயுதப்படை தேர்வுக்கான விண்ணப்பங்கள் இன்று (ஏப்ரல் 24) முதல் தொடங்குகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 20ம் தேதி ஆகும். ஆகஸ்ட் 18ல் தேர்வுகள் நடைபெறுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://upsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று சரிபார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.