மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சியடைந்த முன்னாள் இராணுவத்தினராக இருக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : யூனியன் பாங்க் ஆப் இந்தியா
மேலாண்மை : மத்திய அரசு
பணி : ஆயுத காவலர்
காலியிடங்கள் : 100
வயதுவரம்பு : 01.01.2019 தேதியின்படி 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வி மற்றும் இதர தகுதிகள் :
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முன்னாள் ராணுவத்தினராக இருக்க வேண்டும்.
- 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கக்கூடாது.
சம்பளம் : மாதம் ரூ.9,560 முதல் ரூ.18,545 வரையில்
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர்
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100.
- இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
- மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை : www.unionbankofindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 18.02.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.unionbankofindia.co.in/pdf/COMMON-NOTIFICATION-AG-RECRUITMENT-4.pdf அல்லது www.unionbankofindia.co.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












