இந்திய தனித்துவ அடையாள ஆணையமான ஆதார் துறையில் (UIDAI) காலியாக உள்ள ஆலோசகர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.40 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு இந்தி மொழிப் பெயர்ப்பு அல்லது மொழிப் பெயர்ப்பு துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Consultants
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி :
மத்திய, மாநில அல்லது பொதுத்துறை, தனியார் துறையில் இந்தி மொழிப் பெயர்ப்பு அல்லது மொழிப் பெயர்ப்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 63 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.40,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவத்தினை 19.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://uidai.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












