தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் காலியாக உள்ள தோட்டக்காரர் மற்றும் காவலர் உள்ளிட்ட 23 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள தமிழக இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 23
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: தோட்டக்காரர்- 13
பணியிடம்: பூம்புகார்-07
பணியிடம்: தூத்துக்குடி-06
கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தோட்டக்காரர் பணிக்கு 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தோட்டங்களை பாரமரிப்பதில் ஒரு வருடத்திற்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: காவலர்-10
பணியிடம்: பூம்புகார்-05
பணியிடம்: தூத்துக்குடி-03
பணியிடம்: மதுரை-01
பணியிடம்: தஞ்சாவூர்-01
கல்வித் தகுதி: காவலர் பணிக்கு 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முன்னாள் ராணுவ வீரர் அல்லது அரசு சார்ந்த நிறுவனத்தில் காவலராக இரண்டு வருட காலம் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.05.2018
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chairman and Managing Director, Tamilnadu TourismDevelopment Corporation Limited, Tourism Complex, No.2, Wallajah Road, Chennai - 600 002.
மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.