தமிழக அரசிற்கு உட்பட்டு திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள Chair Person, Members உள்ளிட்ட பணியிடங்ளை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு குழந்தை உலவியல், சட்டம், சமூகம் சார்ந்த துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பக்ள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : சமூக பாதுகாப்பு துறை, திருச்சி
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Chair Person மற்றும் Members
மொத்த காலிப் பணியிடம் : தற்போது வெளியிடப்பட்டுள் இந்த அறிவிப்பில் திருச்சி மாவட்ட அரசு சமூக பாதுகாப்பு துறையில் Chair Person மற்றும் Members பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் முன் அனுபவம் :
Child Psychology, Psychiatry, Law, Social Work, Sociology, Human Development போன்ற பாடங்களில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 35 வயது முதல் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் 15.09.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குந்தை பாதுகாப்பு அலகு, எண்: 1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்க வளாகம், கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி - 620001. தொலைபேசி எண் : 0431- 2413055
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.