திருச்சியில் செயல்பட்டு வரும் என்ஐடி என அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், அக்கவுன்டன்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மே 31ஆம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வில் நேரடியாகக் கலந்து கொள்ளலாம்.

பணி: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
காலியிடங்கள்: 13
சம்பளம்: 12,000
பணி: அக்கவுன்டன்ட் டிரெய்னி
காலியிடங்கள்: 04
சம்பளம்: 12,000
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்குப் பட்டப்படிப்புடன் மைக்ரோசாஃப்ட் ஆபீஸில் திறன் பெற்றவர்களாகவும், தட்டச்சு தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அக்கவுன்டன்ட் பதவிக்கு பி.காம் படித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: மே 31ஆம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வில் நேரடியாகக் கலந்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடைபெறும்.
தேர்வு நடைபெறும் இடம்:
ஓரியன் கட்டடம்,
என்ஐடி,
திருச்சிராப்பள்ளி.
இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து குறிப்பிடப்பட்டு சான்றுகளின் நகல்களின் இணைப்புகளுடன் 31-05-2018 காலை 9.00 மணிக்கு நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதிகள் குறித்த முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Click it and Unblock the Notifications












