தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 969 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் மார்ச் 20ம் தேதிமுதல் தேர்விற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழக காவல்துறையில் காலியாக தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை உள்ளிட்ட 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் தகுதியானவர்களை தேர்வு செய்ய விரைவில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் www.tnusrbonline.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக மட்டும் மார்ச் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும், தேர்வு குறித்தான விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு சீருடை தேர்வு குழும அலுவலகம், அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தேர்வு உதவி மையங்கள் இம் மாதம் 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
விண்ணப்பம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், 044-40016200, 044-28413658 என்ற தொலைபேசி எண்களையும் அல்லது 94990 08445, 91762 43899, 97890 35725 என்ற கைபேசி எண்களையும் தொடர்புக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












