காவல்துறை, சிறை மற்றும் சீர்திருத்தத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளில், இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டன், தீயணைப்பு வீரர் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு, ஜூலை மாதம் வெளியானது.
நவம்பர் 27இல் நடைபெறவுள்ள தேர்வுக்கான அனுமதி சீட்டை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 3,552 பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது.

நிர்வாகம் : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்(Tnusrb)
மேலாண்மை : மத்திய
அரசுபணி விவரம்
காவல்துறை
· இரண்டாம் நிலைக் காவலர்(மாவட்ட, மாநகர ஆயுதப்படை)
· இரண்டாம் நிலைக் காவலர்(தமிழ்நாடு சிறப்புக் காவல் படை)
சிறை மற்றும் சீர்திருத்தத் துறை
· இரண்டாம் நிலை சிறைக் காவலர்
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை
· தீயணைப்பாளர்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
பணியிடங்கள் எண்ணிக்கை: 3,552
ஹால்டிக்கெட் எப்படி டவுன்லோடு செய்வது
தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளமான https://cr2022.onlineregistrationform.org/TNU/LoginAction_input.action இல் எழுத்துத் தேர்விற்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்களது பயனர் எண், மற்றும் கடவு எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த அனுமதிச் சீட்டில் எழுத்துத் தேர்வு மைய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.

தமிழ் படிச்சிருந்தா 20 சதவீதம்
மொத்த காலிப் பணியிடங்களில் 20 சதவீதம் பணியிடங்கள், முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை பயிற்று கொண்டு படித்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும்.
ரொம்ப முக்கியம் யூத்ஸ்
2022 அரசு விதிமுறைகளின் படி, இந்த எழுத்துத் தேர்வில் முதன் முறையாக தமிழ் மொழி தகுதித்தேர்வு நடத்தப்படும். இதில், குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுடைய முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.
தேர்வு முறை
எழுத்துத் தேர்வு, உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, உடல் திறன் போட்டிகள், சிறப்பு மதிப்பெண்கள் ஆகிய நடைமுறைகளில், தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
https://cr2022.onlineregistrationform.org/TNU/LoginAction_input.action


Click it and Unblock the Notifications












