தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக துணை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பு தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்பட்டு வபுகின்றன. 2024 ஆம் ஆண்டு துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு வருகிற ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று தற்போது மிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த முறை எவ்வளவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்த தேர்வுக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வு குறித்த விவரங்களை tnusrb.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்த்து அறியலாம்.
இந்த அறிவிப்பு வந்துள்ளதால் இந்தத் தேர்வுக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த தேர்வர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












