தமிழக சமூக நலத்துறையின் (TNSWD) கீழ் இயங்கி வரும் திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (சகி) பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s37f6ffaa6bb0b408017b62254211691b5/uploads/2023/12/2023122962.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்த திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தான் (சகி) தற்போது பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
வழக்குப் பணியாளர் எனப்படும் கேஸ் வொர்க்கர் (Case Worker) பிரிவில் 2 பணியிடங்களும், செக்யூரிட்டி பிரிவில் (Security - 02 பணியிடங்களும், மல்ட்டிபர்ப்பஸர் பிரிவில் (Multipurposer) 1 பணியிடமும் காலியாக உள்ளன.

தமிழக சமூக நலத்துறையின் பணிக்கான கலவித்தகுதி:
கல்வி தகுதி அனுபவம் Case Worker பணிக்கு, Master Degree (MSW, MA), 2 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.
செக்யூரிட்டி பணிக்கு (Security) 10ம் வகுப்பு தேர்ச்சி, 2 ஆண்டுகள் பணிஅனுபவமும் தேவை, மல்ட்டிபர்ப்பஸர் (Multipurposer) 10ம் வகுப்பு தேர்ச்சியும், 2 ஆண்டுகள் பணி அனுபவமும் தேவை.
ஊதிய விவரம்:
இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியானவர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.
தேர்வு செய்யும் முறை:
இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (31.01.2024) தபால் செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s37f6ffaa6bb0b408017b62254211691b5/uploads/2023/12/2023122962.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












