ஆழ்வார்திருநகரி டிரைவர் வேலை 2023
துாத்துக்குடி மாவட்டம், ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஜீப் ஓட்டுநர் பணியிடங்களுக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் : ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை(Rural Development and Panchayat Raj Department)
மேலாண்மை : மாநில அரசு
காலிப்பணியிடம் மாவட்டம்: ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி மாவட்டம்

பணி விவரம்
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்
v அலுவலக உதவியாளர்
v ஈப்பு ஓட்டுநர்
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 07.04.2023
கல்வி தகுதி
அலுவலக உதவியாளர்
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.
ஈப்பு ஓட்டுநர்
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். ஐந்து ஆண்டு பணி அனுபவமும் அவசியம் ஆகும்.
ஊதியம்
அலுவலக உதவியாளர் : ரூ.15,700-ரூ.50,000
ஈப்பு ஓட்டுநர் : ரூ.19,500-ரூ.62,000
விண்ணப்பிக்கும் முறை/ நிபந்தனைகள்
விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பதாரர் காலி பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.25/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10x4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call letter) அனுப்பி வைக்கப்படும்.
காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள், விண்ணப்ப படிவம், தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதள (National Career Service Portal) www.ncs.gov.in மற்றும் thoothukudi.nic.in என்ற மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 07.04.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் ஆணையாளர், தொடர்புடைய ஊராட்சி ஒன்றியம் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விபரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.
விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு என பரீசீலனையில் கண்டறியப்பட்டால், அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.
நியமனத்தை ரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு உண்டு.
வயது வரம்பு
இந்தப் பணியிடங்களுக்கு பொதுப் பிரிவு பிரிவினருக்கு 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர், ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை எண்.303 நிதி (ஊதியக்குழு) துறை நாள்: 11.10.2017, அரசாணை எண்.305 நிதி (ஊதியக்குழு) துறை நாள்: 13.10.2017ப்படி ஊதியம் மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.
முகவரி
ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
ஆழ்வார்திருநகரி,
(இ) தென்திருப்பேரை- 628 623
தொலைபேசி எண் - 04639 273228
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, அரசாணை எண்: 303, நிதி(ஊதியக்குழு) துறை நாள்:11.10.2017, அரசாணை எண்: 305, நிதி(ஊதியக்குழு) துறை நாள்:13.10.2017 மற்றும் அரசாணை எண்: 306, நிதி(ஊதியக்குழு) துறை நாள்:13.10.2017-இன்படி, ஊதியம் மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.


Click it and Unblock the Notifications












