தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் காலியாகவுள்ள 150 சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-வது தேர்ச்சி, ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 150
பணி மற்றும் காலிப்பணியிட விபரங்கள்
சேலம் - 09, நாமக்கல் - 04, கிருஷ்ணகிரி - 10, நீலகிரி - 03, புதுக்கோட்டை - 07, திருப்பூர்- 12, கரூர், - 03, திருவண்ணாமலை - 11, தூத்துக்குடி - 25, கடலூர் - 20, நாகப்பட்டினம் - 12, தேனி - 14, திருவாரூர் - 08, திருவள்ளூர் - 07, அரியலூர் - 06
பணி : சாலை ஆய்வாளர்
கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கட்டுமான வரைதொழில் அலுவலர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். இதற்கான கல்வியை முழு நேர படிப்பு முறையில் மட்டுமே பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.07.2020 தேதியின்படி விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு முறை : இப்பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பணியிடம் : தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தேசிய தொழில் நெறி வழிகாட்டு மையத்திற்கான www.ncs.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், அல்லது அந்தந்த மாவட்ட https://tiruvallur.nic.in வலைத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து சம்மந்தப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித் தனியான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட மாவட்டம் அறிவித்துள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தேதியின்படி அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.