தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலர், ஓட்டுநர், காவலர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 380-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
மொத்த காலியிடங்கள் : 189-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணிகள் : ஊராட்சி செயலர், ஓட்டுநர், காவலர், பதிவு கிளார்க் மற்றும் அலுவலக உதவியாளர்
மாவட்டங்கள் வாரியான காலிப் பணியிட விபரங்கள்:
1. அரியலூர் - 11 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)
2. ஈரோடு - 17 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)
3. கரூர் - 14 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)
4. கிருஷ்ணகிரி - 15 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)
5. நாமக்கல் - 19 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)
6. திருவாரூர் - 12 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)
7. நாகப்பட்டினம் - 20 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)
8. தூத்துக்குடி - 17 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)
9. காஞ்சிபுரம் - 49 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)
10. ராமநாதபுரம் - 15 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்குத் தமிழ் மொழி படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 1.7.2019 தேதியின்படி 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினராக இருந்தால் 30 வயதிற்கு உட்பட்டும், பிற்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பிறகு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நோ்முகத் தோ்வுக்கான அழைப்பாணை கடிதம் கிராம ஊராட்சிகளின் தனி அலுவலர்களால் அனுப்பி வைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள மாவட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அந்தந்த ஒன்றியத்தில் உள்ள ஊராட்சியின் தனி அலுவலர்களான வட்டார வளா்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சிகள்) அஞ்சல் முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnrd.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அந்தந்த மாவட்ட இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைக் காணவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 25.11.2019 தேதிக்குள் கிடைக்கும் படி அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.