சென்னையில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம், 12 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 8-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், சென்னை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : அலுவலக உதவியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 12
வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : http://www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், 4வது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 15
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 08.03.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tnrd.gov.in/pdf/OA_advertisement.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.