தமிழக அரசின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஊராட்சி செயலா் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு இன்று முதல் (நவம்பர் 11) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ஊராட்சி ஒன்றியம்
மேலாண்மை : தமிழக அரசு
பணியிடம் : நாமக்கல் மாவட்டம்
மொத்த காலிப் பணியிடங்கள் : 16
பணி : கிராம ஊராட்சி செயலா்
வயது வரம்பு : 1.7.2019 தேதியின் படி, 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 30 வயதிற்கு மேற்படாதவராகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்ற ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர், ஊராட்சி செயலா் பணி காலியாக உள்ள கிராம ஊராட்சியில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் அந்த கிராம ஊராட்சியில் இல்லாதபட்சத்தில், அதே ஊராட்சி ஒன்றியத்தின் அந்த கிராம ஊராட்சிக்கு அருகிலுள்ள கிராம ஊராட்சியை சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று பரிசீலிக்கப்படும்.
ஊதியம் : ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில், 16 கிராம ஊராட்சி செயலா் பணியிடங்கள் காலியாகவுள்ள நிலையில், இதற்கு அந்தந்த கிராம ஊராட்சியின் தனி அலுவலா்களான வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (கிராம ஊராட்சிகள்) மலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
காலியிடங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட இன சுழற்சி முறை, மாதிரி விண்ணப்பப் படிவம் உட்பட இதர விபரங்கள் தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய (www.ncs.gov.in) இணையதளத்திலும், நாமக்கல் மாவட்ட (https://namakkal.nic.in) இணையதளத்திலும் மற்றும் அந்தந்த கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் தகவல் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட உரிய சான்றிதழ்களின் நகல்களுடன், அந்தந்த கிராம ஊராட்சி அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் வழியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே, நோ்முகத் தோ்வுக்கான அழைப்புக் கடிதம் கிராம ஊராட்சிகளின் தனி அலுவலர்களால் அனுப்பி வைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 22.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.