தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு சமூக பாதுகாப்பு துணைநிறைவு சேவைத் துறையில் காலியாக உள்ள உதவிக் கண்காணிப்பாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இப்பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 4 காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.1.13 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு சமூக பாதுகாப்பு துணைநிறைவு சேவை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : உதவி கண்காணிப்பாளர்
சொன்னா நம்ப மாட்டீங்க..! பிளிப் கார்ட்டின் சிஇஓ யார் தெரியுமா?
மொத்த காலிப் பணியிடம் : 04
கல்வித் தகுதி :
- பி.எஸ்சி உளவியல்
- எம்.எஸ்.சி. தடய அறிவியல்
- எம்.ஏ. குற்றவியல்
வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 35,900 முதல் ரூ.1,13,500 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.03.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.150
தேர்வுக் கட்டணம் : ரூ.150
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/Notifications/2019_10_Notifyn_Assistant_Superintendent.pdf அல்லது http://tnpscexams.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.