தமிழக சுகாதாரத் துறையின் கீழ் காலியாக உள்ள மூன்று பயிணிடங்களை நிரம்பும்பொருட்டு விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்துறையில் பணியாற்ற விருப்பமுள்ள தகுதியுடையோர் டிஎன்பிஎஸ்சி இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பத்தினை பூர்த்திசெய்து சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)-யின் கீழ் செயல்பட்டு வரும் உள்ள சுகாதாரத் துறையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புப் பிரிவில் உள்ள 3 காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 2018 அக்டோபர் 10ம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதள முகவரியான http://www.tnpscexams.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தினை அனுப்பவேண்டும்.
மொத்த காலியிடம் : 3
துறை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
கல்வித் தகுதி : மானுடவியல், சமூகவியல், பொருளாதாரம், சமூகப் பணி உள்ளிட்ட ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பி.ஏ., அல்லது பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி இடம் : பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை, தமிழ்நாடு
ஊதியம் : ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரை
நிறுவனம் : பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புப் பிரிவு
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு
விண்ணப்பம் வரவேற்கப்படும் நாள் : 2018 செப்டம்பர் 18 முதல்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 2018 அக்டோபர் 15 வரை
வயது வரம்பு : 21 முதல் 30 வயது
விண்ணப்பக் கட்டணம் : ரூபாய் 150 மட்டும்
தேர்வுக் கட்டணம் : ரூபாய் 150 மட்டும்
தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் : 2018 அக்டோபர் 17
தேர்வு நடைபெறும் நாள் : 2018 டிசம்பர் 22