தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் உதவி நூலகர் மற்றும் இளநிலை கல்வெட்டியல் துறைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 2018 அக்டோபர் 14ம் தேதியக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தகுதியும், இதர தகவல்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
காலிப் பணியிடம் : உதவி நூலகர் மற்றும் இளநிலை கல்வெட்டியல்
துறை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பி.ஏ.தமிழ் அல்லது சமஸ்கிருதம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
முன்அனுபவம் : தேவையில்லை
வேலை : கையெழுத்துப் பிரதிகளை கவனித்தல், கல்வெட்டுக்களை கையாளுதல்.
திறன் : தமிழ் மொழி நன்கு அறிந்தவர்
பணி இடம் : தமிழ்நாடு
ஊதியம் : ரூ. 35400 முதல் ரூ. 112400
நிறுவனம் : சிவில் சர்வீஸ்
வயது வரம்பு : 18 முதல் அதிகபட்சமாக 30 வயது வரை
விண்ணப்பம் வரவேற்கப்படும் நாள் : 2018 செப்டம்பர் 14 முதல்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 2018 அக்டோபர் 14 வரை
டிஎன்பிஎஸ்சி இணைய முகவரி : "http://www.tnpsc.gov.in/"