தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தமிழ்நாடு மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. புள்ளியியல் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தற்போது ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்குத் தகுதியும், விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை : புள்ளியியல் விரிவுரையாளர்
காலிப் பணியிடம் : 03
கல்வித் தகுதி :-
- முறையான பாடத்திட்டத்தின் கீழ் படித்து புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- தமிழில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
- 01.07.2018 தேதியின் படி 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
ஊதியம் : ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரையில்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
தேர்வு நடைபெறும் தேதி : 2019 ஜனவரி 12
தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி
தேர்வுக் கட்டணம் : ரூ.200.
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 11
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவம் பெறவும் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnpsc.gov.in/notifications/2018_25_notyn_lect_in_statistics.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
ஆபீசுல கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும், உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும் இருந்தா இப்படித்தான்!