டி.என்.பி.எஸ்.சி., என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 5 - A (தலைமை செயலக பணி ) உதவிப் பிரிவு அலுவலர் / உதவியாளர் பதவிக்களுக்கான காலிப் பணியிடங்களைப் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.
முன்னதாக, இணையவழி விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான காலம் செப்.,26 நள்ளிரவு 12.01 முதல் - 28.09.2022 இரவு 11.59 வரை வழங்கப்பட்டு இருந்தது.
நிர்வாகம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
மேலாண்மை : மாநில அரசு
பணி இடங்கள்
· இளநிலை உதவியாளர்(Junior Assistant)
· உதவியாளர்(Assistant)
பணியிடங்கள் எண்ணிக்கை: 161
எவ்வளவு ஊதியம்
தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி சாராத பிரிவு உதவி அலுவலர் பதவிக்கும், நிதிப் பிரிவு உதவி அலுவலர் பதவிக்கும், ஊதியமாக ரூ.36,400 முதல் ரூ.1,34,200 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி சாராத உதவியாளர் பதவிக்கும், நிதி உதவியாளர் பதவிக்கும் ஊதியமாக, ரூ.20,000 முதல் ரூ.73,700 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தகுதிகள் என்னென்ன
தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி சாராத பிரிவு உதவி அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசில் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் பதவியில் அல்லது இரண்டு பதவிகளிலும் சேர்த்து, ஐந்து ஆண்டுகளுக்கு குறையாத கால அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தலைமைச் செயலகத்தில், நிதி பிரிவு உதவி அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் வணிகம் அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசில் இளநிலை உதவியாளர், தமிழ்நாடு அமைச்சக சேவை அல்லது தமிழ்நாடு நீதித்துறை பணி ஆகியவற்றில் வழங்கப்பட்ட சேவைகளை உள்ளடக்கிய உதவியாளர் பிரிவில், ஐந்தாண்டுகளுக்கு குறையாத காலத்துக்கு பணியாற்றி அனுபவம் இருக்க வேண்டும்.
தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி சாராத பிரிவு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசில் இளநிலை உதவியாளர் அல்லது தமிழ்நாடு அமைச்சக சேவை அல்லது தமிழ்நாடு நீதித்துறை பணி ஆகியவற்றில் வழங்கப்பட்ட சேவைகளை உள்ளடக்கிய உதவியாளர் பிரிவில், மூன்று ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தலைமைச் செயலகத்தில், நிதி உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க, வணிகம் அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசில் இளநிலை உதவியாளர் பிரிவில் அல்லது உதவியாளர் பிரிவில் அல்லது தமிழ்நாடு அமைச்சகப் பணி அல்லது தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியில் அல்லது இரண்டு பதவிகளிலும் சேர்த்து மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் சேவையாற்றி இருக்க வேண்டும்.
தேர்வு எப்போது?
டிசம்பர் 18ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுத் தமிழ் தேர்வும், அதே நாளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொது ஆங்கிலம் தேர்வும் நடைபெறும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
தகுதியான தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/, tnpscexams.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக 0பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வர்கள் தங்களின் ஒரு முறை பதிவேற்றம் வாயிலாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம்.
ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்ய கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!
https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ==
தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர் / இளநிலை உதவியாளர்கள் மட்டுமேஇத்தேர்வில் பங்கேற்க முடியும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து இருந்தது.