டிஎன்பிஎஸ்சி தேர்வினை வெல்ல இங்கே சில டிப்ஸ்கள் கொடுக்கின்றோம். தேர்வுகள் நெருங்கி கொண்டிருக்கின்றது. குரூப் 4 தேர்வை வெல்லும் கனவுடன் இருப்போம். சிறப்பாக செயல்பட வேண்டும் கட் ஆப்பில் நாம் சிறந்து விளங்க வேண்டும்.
20லட்சம் பேர் எழுதும் தேர்வினை வெல்வது தேர்வு எழுதிவோரின் கனவாகும். அதனை நாம் முழுமையாக தெரிந்து செயல்பட வேண்டும். போட்டித் தேர்வு என்பது கண்கட்டி வித்தை போன்றது சரியான கவனம் இல்லையென்றால் நம்மை அது கிழே சாய்த்துவிடும்.
குரூப் 4 தேர்வுக்கு மீதமுள்ள 15 நாட்களில் கொஞ்சம் சரியாமல் படிப்போம். அப்பொழுதுதான் நலம் பயக்கும். தேவையற்ற மன குழப்பங்கள், வீட்டு சிக்கல்களுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் படியுங்கள் அதுவே போதுமானது ஆகும்.
20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள டிஎன்பிஎஸ்சி :
டிஎன்பிஎஸ்சி தேர்வினை வெல்ல நாம் சிறந்து படிக்க வேண்டும். அதற்கான ஸ்ரேட்டஜியை நன்முறையில் வகுக்க வேண்டும். நாம் எந்த அளவிற்கு நமது உழைப்பை கொடுக்கின்றோமோ அந்த அளவிற்கு அதற்கான கூலியை பெறலாம்.
ஓடிஓடி உழைக்கனும் ஊறுக்கெல்லாம் கொடுக்கனும். என்ற கவி வரியை நினைவுப் படுத்திப்பாருங்கள் நீங்கள் சிறந்த ஒரு வளர்சியை எட்டிப்பிடிக்கலாம். ஆம் நீங்கள் கடுமையாக படித்து வாங்கும் வேலையோடு ஊருக்கு சேவை செய்யும் சிறந்த வாய்ப்பினை பெறலாம்.
குரூப் 4 வேலைவாய்ப்பு:
குரூப் 4 தேர்வானது கிளார்க், பில்கலெக்டர் போன்ற பணிகளை உள்ளடக்கியது. இப்பணிக்கு பள்ளி சில்லப்பஸ் படித்தால் போதுமானது ஆகும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனும் போது இந்த தேர்வுக்கான கேள்வித்தாள் மிக எளிதாக இருக்குமென்பதில் எந்த மாற்று கருத்து இல்லை ஆனால் கட் ஆப்பில் முந்தி நிற்பவர்களுக்கே வேலை வாய்ப்பு என்பதுதான் உண்மை. குரூப் 4 தேர்வினை நாம் சிறப்பாக எட்டிப் பிடிக்க வேண்டுமென்றால் நன்றாக படிப்பதோடு தேர்வுக்கான சில எளிய அனாலைசிஸ் முறையை பின்பற்றலாம்.
குரூப் 4 தேர்வும் சரியான திட்டமிடலும்:
குரூப் 4 தேர்வுக்கு அடுத்த மாதம் நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு தயாராக வரும்பொழுது நாம் சிறப்பான இடத்தை பெறலாம். போட்டி தேர்வு என்பது அனைவராலும் எளிதாக எழுதப்படகூடியது தரத்தில்தான் இருக்கும். அது மிக கடினமானது அல்ல அதே சமயம் போட்டி நிறைந்திருக்கும் என்பதில் மாற்று கருத்துமில்லை.
திட்டமிட்டு படிக்கும் முறையை நாம் கையாள வேண்டும். எந்த அளவிற்கு நீங்கள் திட்டமிட்டு படிக்கின்றிர்களோ அந்த அளவிற்கு நாம் எளிதாக இந்த தேர்வை வெல்லலாம்.
கட் ஆப் :
குரூப் 4 தேர்வினை வெல்ல தேர்வர்கள் அதிக மதிபெண்கள் பெற வேண்டும். அதிக மதிபெண் என்றால் கேள்த்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு எல்லாம் சரியான விடை கொடுத்து, முன்னனியில் நிற்க வேண்டும். நாம் எந்த அளவிற்கு போட்டி தேர்வினை வெல்ல உறுதியோடு கட் ஆப் பெறுவதில் மெனக்கெடுகிறோமோ அந்த அளவிற்கு நாம் டாப்பர் ரேங்கில் நிற்கலாம். நமது எண்ணங்களே நம்மை செயல்படத் தூண்டும்
நம்பிக்கை விடாமுயற்சி :
நம்பிக்கையுடன் விடாமுயற்சி இருக்க வேண்டும். தேர்வை வெல்லனும் என்ற எண்ணத்தை வலிமைப் படுத்துங்க. நீங்கள் எந்த அளவிற்கு வலிமையுடன் இருக்கின்றீர்களோ அந்த அளவிற்கு சிறந்து விளங்குவீர்கள். வலிமையான சிந்தனை நம்மை வலி நடத்தும் ஆகவே நமக்கு வாழ்வில் எந்த ஒரு தருணமும் கசக்காது.
சார்ந்த பதிவுகள்:
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு
இந்தியாவிலேயே முதல் அதிநவீன மெட்ரோ அமைப்பின் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்