கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு!

கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர் பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஏப்ரல் 25-ஆம் தேதியன்று தொடங்குகிறது.

கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர் பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஏப்ரல் 25-ஆம் தேதியன்று தொடங்குகிறது.

கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வின் ஒரு பகுதியாக சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஏப்ரல் 25ம் தேதியன்று துவங்கப்பட உள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக வரும் ஏப்ரல் 25 முதல் மே 6-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு முன்னர் அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை உரிய காலத்துக்குள் பதிவேற்றம் செய்யவில்லை என்றால் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி, அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Certificate Verification and Counselling April 25
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X