தமிழக அரசின் வேலை வாய்ப்புத் துறையில் காலியாக உள்ள உதவி பயிற்சி அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மொத்தம் 13 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கான ஆட்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வு செய்யப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழக அரசின் வேலை வாய்ப்புத் துறை
தேர்வு வாரியம் : டிஎன்பிஎஸ்சி
மொத்த காலிப் பணியிடங்கள் : 13
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
உதவி பயிற்சி அதிகாரி : (தட்டச்சு- ஆங்கிலம்)
காலியிடங்கள் : 12
உதவி பயிற்சி அதிகாரி (செயலக பயிற்சி
காலியிடங்கள் : 01
ஊதியம் : மாதம் ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரையில்
கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சு பிரிவில் உயர் பிரிவு மற்றும் மூத்த பிரிவு தேர்ச்சு பெற்று தமிழக அரசால் நடத்தப்படும் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி : உதவி பயிற்சி அதிகாரி (செயலக பயிற்சி
காலியிடங்கள் : 01
கல்வித் தகுதி : வணிக பயிற்சி பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று சுருக்கெழுத்து தட்டச்சில் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- 01.07.2019 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- எஸ்சி, எஸ்ஏ, எஸ்டி, எம்பிசி, டிசி, பிசி, பிசிஎம் பிரிவினர்களுக்கு வயது உச்ச வரம்பு கிடையாது.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.05.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/Notifications/2019_14_notification_ato.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.