தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் இப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மொத்தம் 26 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.75 லட்சம் வரையிலும ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, ராணிபேட்டை
மேலாண்மை : தமிழ்நாடு அரசு
பணி : ஆராய்ச்சி உதவியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 26
வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : அறிவியல் துறையில் மைக்ரோ பயாலஜி, பேதாலஜி, அனிமல் பயோ டெக்னாலஜி விலங்கியல், தாவரவியல், வேதியியல் பிரிவில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ. 55,500 முதல் ரூ.1,75,700 வரையில்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150
தேர்வுக் கட்டணம் : ரூ. 200
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 29.05.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/Notifications/2019_17_Notifyn_Research_Assistant.pdf அல்லது www.tnpsc.gov.in என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












