வேளாண்மைத் துறை அலுவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக பெறப்பட்டன. இதனைத்தொடர்ந்து தமிழக அmரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மையங்களில் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த எழுத்துத் தேர்வு முடிவுகளை தற்போது டிஎன்பிஎஸ்சி தனது அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnpsc.gov.in/results/sel_cv_i_aoext_2k18_list.pdf பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கம் சேவையின் கீழ் 2015-2-16, 2016-2017, 2017-2018 மற்றும் 2018-2019 பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தங்களது சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கபட்டுள்ளனர். அவர்களது சான்றிதழ்களை நகல் எடுத்து, வரும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 9ஆம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதில், தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்னர் உடனடியாக இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications












