தமிழ்நாடு தொழில் வணிக ஆணையரகத்தில் காலியாக உள்ள உதவி இயக்குநர், உதவி கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட மேலும் விபரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு தொழில் வணிக ஆணையரகத்தில் காலியாக உள்ள உதவி இயக்குநர் (டெக்னிக்கல்), உதவி கண்காணிப்பாளர் (கெமிக்கல் பிரிவு) ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மொத்த காலிப் பணியிடங்கள்:-
மொத்தம் 12 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், வணிக ஆணையரகத்தில் உதவி இயக்குநர் (டெக்னிக்கல்) பணிக்கு 11 காலியிடமும், உதவி கண்காணிப்பாளர் (கெமிக்கல் விங்) பணிக்கு ஒரு காலிப் பணியிடமும் உள்ளது.
கல்வித்தகுதி:
உதவி இயக்குநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், சிவில் மற்றும் ஆர்கிடெக்சர் தவிர மற்ற துறைகளில் பொறியியல் முடித்தவராக இருக்க வேண்டும். மேலும், துறை சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தது ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உதவி கண்காணிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இரசாயனம் பொறியியல் துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். மேலும், குறைந்தது மூன்று ஆண்டுகளுக்குப் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
வயது வரம்பு:
வணிக ஆணையரகத்தில் உதவி இயக்குநர், உதவி கண்காணிப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் 01.07.2019 தேதியின்படி 58 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினராக இருந்தால், 35 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இராணுவத்தினராக இருந்தால் 48 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்
மேற்குறிப்பிட்ட இரண்டு பணிகளுக்குமே லெவல் 22ன் படி ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி மூலம் இப்பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் 56,000 ரூபாயிலிருந்து 1,77,500 ரூபாய் வரையில் ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்
டிஎன்பிஎஸ்சி உதவி இயக்குநர், உதவி கண்காணிப்பாளர் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியான நாள் : 9 டிசம்பர் 2019
தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 8 ஜனவரி 2020
தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் : 10 ஜனவரி 2020
தேர்வுகள் நடைபெறும் நாள் : 25 மற்றும் 26 ஏப்ரல் 2020
தேர்வு முறை:
எழுத்துத்தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு 2020 ஆம் ஆண்டு ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் ஆகியவை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் உள்ளது.
தேர்வு பாடத்திட்டம்
உதவி இயக்குநர் (டெக்னிக்கல்) பணிக்கான தாள் 1 தேர்வில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு, பட்டப்படிப்பு அளவில், அடிப்படை பொறியியல் பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும். கண்காணிப்பாளர் பணிக்கு, கெமிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் இருந்து 300 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும். இரண்டு பதவிக்கும் பொதுவாக தாள் 2 தேர்வு நடக்கும். பொது அறிவு கேள்விகள், திறனறிவு கேள்விகளும் இடம்பெற்றிருக்கும்.
தேர்வுக்கட்டணம்
ஏற்கனவே, டிஎன்பிஎஸ்சி-யில் பதிவு செய்தவர்கள், தேர்வுக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். அல்லது புதிதாக விண்ணப்பிப்போர் தேர்வுக்கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். ஒரு முறை பதிவுக்கட்டணம் 150 ரூபாய் ஆகும். இக்கட்டணத்தை ஆன்லைன் அல்லது நேரடியாக வங்கியின் மூலமாக செலுத்தலாம். வங்கி வழியாக கட்டணம் செலுத்த விரும்புவோர் ஜனவரி 10ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு
TNPSC Official Notification 2019 அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் http://www.tnpsc.gov.in/ அல்லது http://www.tnpsc.gov.in/Notifications/2019_34_notyfn_AD_IndComm.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து காணலாம்.