தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள 133 சுற்றுச்சூழல் ஆய்வாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.1.20 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
மொத்த காலியிடங்கள் : 133
பணி : உதவி பொறியாளர்
காலிப் பணியிடங்கள் : 73
பணி : சுற்றுச்சுழல் ஆய்வாளர்
காலிப் பணியிடங்கள் : 60
ஊதியம் : மாதம் ரூ. 37,700 முதல் ரூ.1,19,500 வரையில்
கல்வித் தகுதி : பொறியியல் துறையில், சிவில், கெமிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக், சூழ்நிலையியல் அறிவியல் துறையில் எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 18 முதல் 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு - ரூ.500
- மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் - ரூ.250
விண்ணப்பிக்கும் முறை : www.tnpcb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.04.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tnpcb.onlineregistrationform.org/TNPCB_DOC/Notification.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.