தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் சுற்றுச்சூழல் ஆய்வாளர், உதவி பொறியாளர், தட்டெழுத்தாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 224 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ. 1.19 லட்சம் வரையிலும் ஊதியம் வழங்கப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 224
பணி மற்றும் பணியிட விபரம்:-
- சுற்றுச்சூழல் ஆய்வாளர் : 60
- உதவி பொறியாளர் : 73
- தட்டெழுத்தாளர் : 55
- இளநிலை உதவியாளர் : 36
கல்வித் தகுதி :-
சுற்றுச்சூழல் ஆய்வாளர் :-
- எம்.எஸ்.சி. உயிர்வேதியியல்,
- எம்.எஸ்.சி வேதியியல்,
- எம்.எஸ்.சி சூழல் அறிவியல்,
- எம்.எஸ்.சி விலங்கியல்
உதவி பொறியாளர் :-
- பி.இ சிவில் இன்ஜினியரிங்,
- எம்.எஸ்.சி சூழல் அறிவியல்,
- பி.டெக் கெமிக்கல் இன்ஜினியரிங்
தட்டெழுத்தாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம்:-
சுற்றுச்சூழல் ஆய்வாளர் : ரூ. 37,700 முதல் ரூ. 1,19,500 வரையில்
உதவி பொறியாளர் : ரூ. 37,700 முதல் ரூ.1,19,500 வரையில்
தட்டெழுத்தாளர் : ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரையில்
இளநிலை உதவியாளர் : ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் www.tnpcb.gov.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 23.04.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :-
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.500
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் ரூ. 250
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpcb.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.