தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து அறக்கட்டளைத் துறைக்கு உட்பட்ட திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, செவிலியர், அட்டன்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.75 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலாண்மை : தமிழக அரசு
துறை : இந்து அறக்கட்டளைத் துறை
பணியிடம் :
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி திருக்கோவில், திருத்தணிகை, திருவள்ளூர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 06
பணி மற்றும் காலிப் பணியிடங்கள்:
- மருத்துவ அலுவலர்- 02
- செவிலியர் - 02
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் (அட்டன்டர்) - 02
கல்வித் தகுதி :
- Medical Officer - MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Nurse - DGNM பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Attender - 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.6,000 முதல் அதிகபட்சம் ரூ.75,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 12.11.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Executive Officer, Arulmigu Subramaniya Swamy Temple, Thiruttani, Tiruvallur-631209.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.