தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது தஞ்சாவூர் மாவட்ட அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள அரச்சகர் மற்றும் பரிச்சாரகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10-வது தேர்ச்சி பெற்ற, தமிழில் நன்கு எழுத படிக்கத் தெரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : தமிழக அரசு
துறை : இந்து அறக்கட்டளைத் துறை (TNHRCE)
பணியிடம் : தஞ்சாவூர் மாவட்ட அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோவில்
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
- அரச்சகர் - 01
- பரிச்சாரகர் - 01
கல்வித் தகுதி :
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழ் நன்கு எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 01.01.2022 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- அர்ச்சகர் பணிக்கு - ரூ.15,300 மாதம்
- பரிச்சாரகர் பணிக்கு - ரூ.13,200 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட கோவிலில் அலுவலக வேலை நாட்களில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 01.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Arulmigu Mullaivana Nathar Temple,
Thirukarukavur,
Papanasam,
Thanjavur-614302
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












