தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து அறக்கட்டளைத் துறையின் கீழ் சிவகங்கையில் அமைந்துள்ள அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் காலியாக உள்ள ஓட்டுநர், ஜாடுமாலி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.19 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலாண்மை : தமிழக அரசு
துறை : இந்து அறக்கட்டளைத் துறை
பணி : டிரைவர், ஜாடுமாலி, தோட்டி, உபகோவில் அர்ச்சகர், ஒதுவார், பாதுகாப்பு, குழுகோவில் காவல்
பணியிடம் : சிவகங்கை அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் கோவில்
மொத்த காலிப் பணியிடம் : 07
கல்வித் தகுதி :
ஓட்டுநர் - 8-வது தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் இருங்க வேண்டும்.
ஜாடுமாலி, தோட்டி, பாதுகாப்பு அதிகாரி, குழுகோவில் காவல் - தமிழில் நன்கு எழுத, படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது.
உபகோவில் அர்ச்சகர், ஒதுவார் - தமிழில் நன்கு எழுத, படிக்கத் தெரிந்திருப்பதோடு ஆகம அறிவு மற்றும் ஆகம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.3,600 முதல் ரூ.18,500 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : செயல் அலுவலர், அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில், அரியாகுறிச்சி, காளையார்கோவில் வட்டம், சிவகங்கை மாவட்டம் - 630 556
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் [email protected] அல்லது vettudayarkaliammantemple.org எனும் அதிகாரப்பூர்வ பக்கத்தைக் காணவும். அல்லது கீழே இணைக்கப்பட்டுள் அறிவிப்பினைக் காணவும்.