தமிழக அரசிற்கு உட்பட்ட இந்து அறக்கட்டளைத் துறையின் கீழ் சென்னை திருவேற்காடு, பூண்டி பகுதியில் உள்ள அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளிட்டு கோவிலில் காலியாக உள்ள அர்ச்சகர், ஓதுவார், நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட 21 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலாண்மை : தமிழக அரசு
துறை : இந்து அறக்கட்டளைத் துறை (TNHRCE)
பணி : அர்ச்சகர், ஓதுவார், நாதஸ்வரம், தவில், மடப்பள்ளி, தோட்டக்காரர், உதவி மின்பணி, கால்நடை பராமரிப்பாளர், தமிழ் புலவர்
மொத்த காலிப் பணியிடம் : 21
கல்வித் தகுதி : தமிழ் எழுத, படிக்க தெரிந்தவர்கள், ஆகம பயிற்சி பள்ளி அல்லது வேத/ தேவார பாடசாலையில் தேர்ச்சி பெற்றவர்கள்,
தோட்டக்கலையில் அனுபவம், தமிழில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.20,200 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு, சென்னை - 600077
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் அதிகாரப்பூர்வ பக்கத்தைக் காணவும். அல்லது கீழே இணைக்கப்பட்டுள் அறிவிப்பினைக் காணவும்.