தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.90 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : தமிழக அரசு
துறை : இந்து அறக்கட்டளைத் துறை
பணியிடம் : பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
பணி : Medical Officer
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.90,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 14.11.2021 தேதிக்குள் https://palanimurugan.hrce.tn.gov.in/ அல்லது www.hrce.tn.gov.in எனும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில், பழனி, திண்டுக்கல் -624601.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












