தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது நாமக்கல் மாவட்ட அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலாண்மை : தமிழக அரசு
துறை : இந்து அறக்கட்டளைத் துறை (TNHRCE)
பணியிடம் : நாமக்கல் மாவட்ட அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில்
மொத்த காலிப் பணியிடங்கள் : 05
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
- இளநிலை உதவியாளர் - 03
- தட்டச்சர் - 01
- டிக்கெட் பஞ்சர் - 01
கல்வித் தகுதி :
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழ் நன்கு எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் :
- உதவி சுயம்பாகம் - ரூ.10,000 முதல் ரூ.31,500 மாதம்
- Junior Assistant, Typist - ரூ.18,500 முதல் ரூ.58,600 மாதம்
- டிக்கெட் பஞ்சர் - ரூ.11,600 முதல் ரூ.36,800 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட கோவிலில் அலுவலக வேலை நாட்கள் அல்லது https://namakkalanjaneyar.hrce.tn.gov.in மற்றும் www.hrce.tn.gov.in எனும் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் அலுவலகம், ஆஞ்சநேயர் திருக்கோயில் வளாகம், நாமக்கல் - 637001
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://namakkalanjaneyar.hrce.tn.gov.in மற்றும் www.hrce.tn.gov.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.