ரூ.50 ஆயிரத்தில் ஸ்ரீரங்கம் கோயிலில் பணி வாய்ப்பு...!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு, இறை நம்பிக்கை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)மேலாண்மை : மாநில அரசு

இறை நம்பிக்க இருந்தால் கோயிலில் பணி...!

பணி விவரம்

· காவலர்

· துப்புரவு பணியாளர்

· தூர்வை

· காவலர்கள்

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.10.2022

பணியிடங்கள் எண்ணிக்கை: 146

காவலர்கள்

ஊதியம்: Rs.15,900-50,400/-

துப்புரவு பணியாளர்

ஊதியம்: Rs.10,000-31,500/-

தூர்வை

ஊதியம்: Rs.10,000-31,500/-

காவலர்

ஊதியம்: Rs.11,600-36,800/-

கல்வித்தகுதி:

குறைந்தபட்ச தகுதிகளாக, தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இறை நம்பிக்க இருந்தால் கோயிலில் பணி...!

வயது வரம்பு

விண்ணப்பதாரர் வயதானது, 01.07.2022 அன்று 18 வயதை பூர்த்தி செய்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் வேண்டும்.

பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

பணியிடங்களின் எண்ணிக்கை, பதவி உயர்வு, பணி ஓய்வு உள்ளிட்ட நிர்வாக காரணங்களுக்காக மாறுதலுக்கு உட்பட்டதாகும்.

நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நேரங்களில், நேரில் சென்று கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை https://srirangamranganathar.hrce.tn.gov.in அல்லது www.srirangam.org என்ற வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், இணை ஆணையர்/ செயல்அலுவலர், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்-620006 என்ற முகவரிக்கு நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 17.10.2022 அன்று மாலை 5.00 மணி வரை மட்டுமே பெற்று கொள்ளப்படும்.

அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்குரிய சான்றுகள் மற்றும் பிற ஆவணங்களுக்கு சான்றிட்ட நகல் மட்டுமே அனுப்ப வேண்டும். அசல் சான்றிதழை நேர்காணலின் போது கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். கேட்கப்பட்ட சான்றிதழ்கள் இன்றி பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்கப்படாது.

மிஸ் பண்ணிடாதீங்க...! ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!

முதலில் https://srirangamranganathar.hrce.tn.gov.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

home page- ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் நிபந்தனைகள் நாள் 17.9.22 என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

புதிதாக தோன்றிய பக்கத்தில், பணி குறித்தான வேலைவாய்ப்பை அறிவிக்கப்பட்டுள்ளது.

https://srirangamranganathar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php

அடுத்ததாக விண்ணப்ப அறிவிக்கை இருக்கும்.

அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

https://srirangamranganathar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Work at Trichy Srirangam Temple: Belief in God and Hinduism? So you can apply for the vacant posts in Srirangam Arulmiku Aranganathaswamy Temple.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X