தமிழ்நாடு மீன்வளத் துறையில் காலியாக உள்ள உதவி மேலாளர் உள்ளிட்ட 12 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு மீன்வள அறிவியல் தறையில் பயின்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் ஆன்லைனில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு மீன்வளத் துறை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : உதவி மேலாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 12
கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மீன்வள அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் அல்லது மீன்வள தொழில்நுட்பம் அல்லது விலங்கியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 01.01.2020 தேதியின்படி 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
எம்பிசி, பிசி, டிசி, பிசிஎம் பிரிவினர்களுக்கு 32 வயதிற்கு உட்பட்டும், எஸ்சி, எஸ்டி மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் பிரிவினர் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரையில்
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 250 ரூபாயினை விண்ணப்பக்கட்டனமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் tnfdcl.onlineregistrationform.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 10.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.