தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 1300 கணக்கீட்டாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு மின்சார வாரியம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 1300
பணி : கணக்கீட்டாளர்
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
வயது வரம்பு : TANGEDCO Recruitment 2020 பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 01.07.2019 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : TANGEDCO கணக்கீட்டாளர் பணியிடத்திற்கு கலை, அறிவியல் அல்லது வணிகவியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று அளவீட்டு கருவிகள் மூலம் கணக்கீடு, மிதிவண்டி ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
10, 12ம் வகுப்பு, டிப்ளமோ முடித்து பின், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : கணினி வழி எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வுக் கட்டணம் :
பிசி, எம்பிசி பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.1,000 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tangedco.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 13.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://govtjobsdrive.in/wp-content/uploads/2020/01/Assessor_Notification_and_Annexures_2019-2020.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.