தமிழக அரசிற்கு உட்பட்டு திருவள்ளூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 98 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8, 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC)
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 98
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
- பருவ கால பட்டியல் எழுத்தர் - 36
- உதவியாளர் - 31
- காவலர் - 31
கல்வித் தகுதி :
பருவ கால பட்டியல் எழுத்தர் - அறிவியியல், இளநிலை பட்ட படிப்பில் B.Sc (Botany, Zoology, Chemistry, Physics, Maths, Biochemistry) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாட பிரிவில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.
உதவியாளர் - 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காவலர் - 10-ஆம் வகுப்பு தவறியவர்கள், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 01.07.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.4,049 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 22.09.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மண்டல அலுவலகம், 46, வள்ளலார் தெரு, பெரியகுப்பம், திருவள்ளூர் - 602 001.
விண்ணப்ப படிவம் மண்டல அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
தேர்வு முறை : கல்வித் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினப் பெறவும் www.tncsc.tn.gov.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.