சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் 8-வது தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை - சிவகங்கை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : ஓட்டுநர்
மொத்த காலிப் பணியிடம் : 11
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி : 1988 மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, தகுதி வாய்ந்த அதிகாரியிடம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டு.
வயது வரம்பு : 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைக்கு ஏற்ப குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://Sivaganga.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்குக் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், உரிய சான்றுகளின், நகல்களுடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு)-க்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி), 2-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், சிவகங்கை என்று முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://Sivaganga.nic.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.