தமிழக அரசிற்கு உட்பட்ட தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் காலியாக உள்ள இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : கால்நடை பராமரிப்புத் துறை, தூத்துக்குடி
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகுதிகள்:
தமிழில் நன்கு எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், புதுப்பிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட கால்நடை பராமரிப்புத் துறையில் ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.thoothukudi.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:
இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், புதுகிராமம், தூத்துக்குடி 628 003
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2021/01/2021012011.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தைக் கிளிக் செய்யவும்.