காஞ்சிபுரம் மாவட்டம், கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8-வது, 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : Tamil Nadu Animal Husbandry Department - Kanchipuram (TNAHD)
மேலாண்மை : தமிழக அரசு
பணி மற்றும் காலிப் பணியிடம் :
- லேப் அட்டெண்டர் - 01
- அலுவலக உதவியாளர் - 02
கல்வித் தகுதி:
- லேப் அட்டெண்டர் - 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர் - 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
மேற்கண்ட இரண்டு பணியிடங்களுக்குமே விண்ணப்பதாரரின் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 2019 ஜூலை 1ம் தேதியின்படி அருந்ததியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின வகுப்பினர்களுக்கு 35 ஆகும். மிகவும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) 32 ஆகும். பொதுப்பிரிவினருக்கு 30 ஆகும்.
ஊதியம் :
லேப் அட்டெண்டர் - ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையில்
அலுவலக உதவியாளர் - ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்களைக் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் சிட்லபாக்கம் கால்நடை பராமரிப்புத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் இலவசமாக நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது, விண்ணப்பங்கள் https://Kanchipuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, ஆஸ்பிட்டல் ரோடு, காஞ்சிபுரம் 631 502 என்ற முகவரிக்கு 10.02.2020 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பிட வேண்டும். அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும்.
தேர்வு முறை : மேற்கண்ட பணிகளுக்கு நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு நடைபெறும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://kancheepuram.nic.in/ என்னும் இணையதளம் அல்லது நேரடியாக அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.