செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : கால்நடை பராமரிப்புத் துறை
மேலாண்மை : தமிழ்நாடு
பணியிடம் : செங்கல்பட்டு
பணி : அலுவலக உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 03
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : மேற்கண்ட பணியிடத்திற்கு 01.07.2019 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆகும். அதிகபட்ச வயது அருந்ததியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின வகுப்பினர்களுக்கு 35 ஆகும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) 32 ஆகும். பொதுப்பிரிவினருக்கு 30 ஆகும்.
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 10.02.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை, ஆஸ்பிட்டல் ரோடு, காஞ்சிபுரம்
தேர்வு முறை : தனிப்பட்ட நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://kancheepuram.nic.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.