தமிழ்நாடு பழங்குடி நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளியில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.எட் பட்டதாரிகள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு பழங்குடி நலத்துறை
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 09
பணி மற்றும் பணியிட விபரங்கள்:
- தலைமை ஆசிரியர் - 08
- கல்வி அலுவலர் - 01
பணியிடம் : தமிழ்நாடு
கல்வித் தகுதி : TN Tribal Welfare Department சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த பணியிடத்திற்கு சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலைப் பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் :
தலைமை ஆசிரியர் பணிக்கு மாதம் ரூ.50,000
கல்வி அலுவலர் (Academic Officer) பணிக்கு மாதம் ரூ. 25,000
தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Ezhilagam Annexe, 1st floor chepauk, chennai-600005
மின்னஞ்சல் முகவரி : [email protected] (அல்லது) [email protected]
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 30.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
TN Tribal Welfare Department இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.