தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தமிழக அரசுக் கல்லூரிகளில் பல துறைகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 2,340 பணியாளர்கள் நேரடி நியமனத்தின் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ஆசிரியர் தேர்வு வாரியம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : உதவிப் பேராசிரியர்
காலிப் பணியிடங்கள் : 2,340
கல்வித் தகுதி :
55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் NET/ SLET/ SET / SLST / CSIR / JRF தேர்ச்சி அல்லது 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 57 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஊதியம் : ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரையில்
முக்கிய நாட்கள் :
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் : 4 செப்டம்பர் 2019
- ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24 செப்டம்பர் 2019
- சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்
காலியாக உள்ள துறைகள் :
தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கணிதம், வரலாறு, இயற்பியல், கணினி, வணிகம், உயிரியியல், உணவு தொழில்நுட்பம், சுற்றுலா என மொத்தம் 73 துறைகளில் உதவிப் பேராசிரியர்கள் நிரப்பப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : www.trb.tn.nic.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ.600
எஸ்.சி, எஸ்டி, மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300
விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பிக்கும் போது ஆன்லைன் வழியில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://trb.tn.nic.in/arts_2019/Notification.pdf என்னும் அறிவிப்பு லிங்க்கிளைக் கிளிக் செய்யவும்.