தமிழ்நாடு சமூக நலத்துறையில் மதுரை வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் காலியாக உள்ள பொதுநல அதிகாரி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் குறித்த முழு விபரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு சமூக நலத்துறை
மேலாண்மை : தமிழக அரசு
பணியிடம் : மதுரை
மொத்த காலிப் பணியிடம் : 03
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-
பொது நல அதிகாரி : 01
கல்வித் தகுதி : M.Sc Human Genetics and Molecular Biology மற்றும் M.A Social Science
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் : 02
கல்வித் தகுதி : B.A Social Science
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
ஊதியம்:
- பொது நல அதிகாரி : மாதம் ரூ.35,000
- மாவட்ட ஒருங்கிணைப்பாளர் : மாதம் ரூ.20,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://madurai.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : District Social Welfare Department, East 2nd Cross Street, K.K. Nagar, Madurai - 20
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.12..2019 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://madurai.nic.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












