சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை அலுவலகத்தில் (NCC) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், Chowkidar உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.50 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய மாணவர் படை (NCC)
பணியிடம் : சென்னை, தேசிய மாணவர் படை அலுவலகம்
பணி : Store Attendant, Chowkidar (EX-Serviceman Category மட்டும்), Office Assistant ஆகிய பணிகளுக்கு என மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி :
Office Assistant மற்றும் Store Attendant - 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Chowkidar - 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Ex-servicemen ஆக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர்கள் 18 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.15,700 முதல் அதிகபட்சம் ரூ.50,400 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Store Attendant
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Office Assistant
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Chowkidar
விண்ணப்பிக்கும் முறை:
சென்னை தேசிய மாணவர் படை அலுவலக பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 05.11.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.11.201 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அல்லது சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cms.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.