சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை அலுவலகத்தில் (NCC) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுனர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளின் கீழ் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு 8-வது தேச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய மாணவர் படை (NCC)
பணியிடம் : சென்னை தேசிய மாணவர் படை அலுவலகம், சென்னை
பணி : தேசிய மாணவர் படையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர் Chowkidar, Store Attendant மற்றும் பல பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வித் தகுதி :
ஓட்டுநர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இலகுரக மற்றும் கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
Chowkidar - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முன்னாள் இராணுவத்தினராக இருக்க வேண்டும்.
Store Attendant, Office Assistant மற்றும் Boat Lascar - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.62,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை:
சென்னை தேசிய மாணவர் படை அலுவலக பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 31.08.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி :
Deputy Director, NCC Directorate (TN,P&AN), State Cell, Fort Saint George, Chennai-600009.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, தகுதித் திறன் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cms.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.